அலைஞனின் அலைகள்: கணம்

Monday, August 29, 2005

சேற்றுச்சங்கதி


'05 ஓகஸ்ற், 28 ஞாயிறு

The Swamp Thing

நிர்ச்சலனத்து நீர்ப்பரப்பிருந்து
பட்டென் றெழுந்து வருகிறது;
சேற்றுக்காலிரண்டு முன்தூக்கி
ஆற்றா மூர்க்கத்தே அலறும்;
மூசுமூச்சு முழுவெப்பம்.
ஆள் தின் எண்ணம்
மின்னும் நகக்கண்.
சொட்டு நீர், சுரி சிலும்பிச்
சுற்றுதோல் உரித்தெறியும்.

உற்றுப் பார்க்கமுன்னால்,
உடுக்கு மொரு நரத்தோற்றம்.
மிடுக்கோடு செருகும்
ஒரு தொப்பி
மேலோ ரிறகு
பத்துப்பேனா
பளபளக்கச் சட்டை
சொட்டு விழியன்பு
மொத்தச்சப்பாத்து

கத்தைத்தாள்,
மடிக்கணணி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கழற்ற மறுத்துக்
கடந்து நடக்கும்.

அலைச்சத்தத்தில்
கூட்டச்சனத்துள்
எட்டிக் கலக்கும்
இன்னோர்
அப்பனாய்
அண்ணனாய்
புத்தனாய்
புதல்வனாய்
போதிசத்வனாய்
புத்தகப்புழுவாய்
மெத்தப்படித்தாரின்
மொத்த வாணிகனாய்.

உரித்துக் கரைகாயும்
தோற்சொரசொரப்பு,
பற்ற
வரும்
மாலை.

'05 ஓகஸ்ற், 28~29 ஞாயி.~திங்.

Friday, August 26, 2005

சொல்


உணர்வு

காலக்குருதி மெல்லத் துளை
காலிடைச் சிந்தத் தள்ளும்
செயல் பொறுக்கிப் பாதம்,
தக்கிட, தடக்கித் தக்கிட,
நடை.

அள்ளும் காற்று; கொல்லும் வெயில்;
வெள்ளம் மழை; எல்லாம் சமமாம்.
கணம் தரியான், நாளெல்லாம்
நசிகின்ற சனங்களுள் நெரியக்
கசியும் ஊனாய்க் கலக்கின்றான்.

நேரென நிலையாக் கண்ணன்
தனைத் தின்னு பசியும் தின்று
ஆலென விரி திரிசடையில், நினைவு
ஆர் தேடியலைவான் இவ்வண்?

சிறு பூனைக்கும் மணிகட்ட
பெரும் போக்குக்காட்டும்
அசலும் நகலும் அரைத்துக்
கைபிசை அழுக்கு நகரிலே
எது தேடி அலைகிறான்
இத்தோட்டி?

காத்து ரயில் பார்த்த காரிராப்
பொழுதொன்றில், மூசி விரை
கடப்பான் முணுமுணுத்தான்,
"எட்டி ஆள் நடக்க
எத்துணை இடமிருக்க
எதற்காய்த் தரிப்பான்
இத்தனை நாள்?"

தனக்கா சொன்னான்?

'05 ஓகஸ்ற், 26 வெள்ளி 14:35 கிநிநே.

Tuesday, August 23, 2005

நிறுவுதல்

காயைக் கனியென்று விடாமல்
நிறுவிக்கொண்டிருப்பவனுக்கு
உதவ விரும்புவோனுக்கான
இரு துணைக்குறிப்புகள்:
அடித்துத் தடி கனிக்கலாம்; வெம்மைக்
குருதியில் ஆழ முக்கிக் கொடுக்கலாம்.

'05 ஓகஸ்ட், 23 செவ். 03:26 கிநிநே.

Monday, August 15, 2005

தவளைப்பகுப்பாய்வு


'05 ஓகஸ்ற் 14, ஞாயி. 11:58:45 கிநிநே.



எரிக்கும் வெயிலில்
எறிந்து கிடக்கிறது
நிழல் சிலுவை.

ஆடு மேய்ப்பர்கள் பேரில்
மேரி மக்தலேனா பேரில்
உருண்டு வரும் போகும்
மனிதச்சுமைமூட்டைகள்
மரமூட்டைத் தறிக்கும்
முதுகால் முதுகென்பால்.

தறித்து வெக்கை தகித்த
பசுமரத்தை பாவக்குருதி
ஒழுக்கித் தகைத்தார்; கழு
வலிக்கும் முள்முடிக்கும்
துளைந்த மூவாணிக்கும்
பாவச்சுமை பாய்ந்து.

இன்றைக்கு, நாள் மூன்றில்
ஆவி உயிர்த்தெழக் கல்வாரி
சேராது எரியச் செத்த சிலாகை
மரச்சிலுவைக்குத்தான் தேவை
சின்னதாயேனும் அஞ்சலிக்கவி,
அமைதி வழிபாடு, அடையாளம்;
வேண்டினால், கூட மூன்று
கூராணிகளுக்கும் குருதி
குத்துப்பட்டதற்காய் மேல்
முள்முடிக்கும் ஓரிரண்டு.

கொத்தித் தூக்குறு மேய்ப்பர்தம்
தொகைபாவம் சாய் சிலுவைதன்
பெருந்துக்கத்தைச் சேர்ந்திசையாய்
நாற்றிசையும் நாம் பாடுவோம், வா.

ஒவ்வொரு கைகூப்புக்கவிதைக்கும்
கரந்துண்டு ஒன்றுக்கு மேற்பட்டு
முளைமாற்றுக்கவிதை; எந்த கள
மாற்றுக்கவிதைக்கும் விதை சில
எதிர் மாற்றுக்கவிதை.


'05 ஓகஸ்ற், 15 திங். 15:11 கிநிநே.

Monday, August 08, 2005

இற்றைநான்

ஓடுநாளில் எழுத,
ஒரு கவிதை
வரி
சொல்
எழுத்து