அலைஞனின் அலைகள்: கணம்

Monday, January 05, 2015

பிணம்

சவம் சவத்தைப் புதைத்த
நிலம் குத்தி முளைத்த சவம்
பரப்பி விட்ட கிளையெல்லாம்
அரவ விழுது சவம் –
புதுசு, இளசு, முதுசு, இடை
முட்டுக்காயெல்லாம் சவம்.
விழுதுச்சவமும் வேர்ச்சவம்
சேராது அறுத்துப்போட, பிணம்
கூட்டி வந்ததும் சவம்.
அறுத்தவை பிரிக்கையில்
அரை குறுக்கிக்கிடந்த
ஆறாம் சவம் அமிதாப்ப;
பருத்து, தின்ற துன்பம்
தொந்தி தேங்கிச் சவம்.
கொடுப்புள் இன்னும்
கொத்தி நின்றது குமிண்சிரிப்பு.
குத்துமீசையாய் மயிர் கிழித்து
மீளமுளைத்தாலும் என்று
சவம் இலக்கம் ஆறை
நிலம் ஆழப்புதைக்காமல்
நீறாய் எரித்தது பிணம்.

July 2, 2014

0பின்னூடுகை:

Post a Comment

<< Home