அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

விட்டகுறை ?

??

விதை போட்ட விந்தோ,
வெந்து வீங்கிய சூலோ
சொல்லாத சேதியைச்
சொல்லென்னும் உன் சூழல்.

கடலும் காற்றும் உடல்
கலந்து விலக்கும் களமாகும்
உன் கதை மொழி.

நகக்கண்ணில் நசிந்துசொட்டும்
நீரின் நிணமும் உனக்கொரு ஒவ்வா
உருத் தரும் ஒவ்வொரு கண்ணிலும்.

சுவாசித்த காற்றின் சுருட்சூத்திரம்,
உட்கொள் உணவின் பகுப்பாய்வு
தினக்கழிப்பிலும் கரையா காபன் வெல்லம்...
...எல்லாவற்றுக்கும் ஏனென்று
கணக்குக் கொடுக்கவும் கூட கட்டாயப்படுத்தப்படலாம்.

பல் விலக்கிச் சொல் விளக்கமுன்னே,
தகி நீற்றுச்சாம்பலுக்குள் அமிழ்ந்துபோவாய்
கறுப்புக்கும் வெளுப்புக்கும்
இடைப்பட்டுக் கால் நடந்ததால் நீ.


~

அறிந்தோர் அறியத்தரவேண்டும்:
-தன்
நட்ட தனி நடுப்பாதையிலேயா
தான் செத்தான்
கொல்லக் குத்தன்* வீடு
தின்ற கௌதம புத்தன் ?

*குத்தன் ~ cunda [not kutta, at least for this post]

0பின்னூடுகை:

Post a Comment

<< Home