அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

இலக்கடைதலின் பின்னே...

பின்னர்,
எண்ணியாங்கு எய்தடைந்த இலக்கில்,
தனியனாய் எழுவாய் நீ.
கண்படர, மானுடக்காலடி படா
ஒளிதெறி மின் பொன்மணற்பரப்பு.
உன்னதே உள்ளளவும்,
வான்விதானம்வரைந்தோடு
தொடுசமவெளி எதிர்ச்சுவரின்றி.
இறும்பூறுற்ற பெருங்கணம் பிரிந்திளகி,
ஆற்றுப்பட வுள்ளம் அவாவுவாய்,
காற்றுப்பட்டொலிக்க உன் கருத்துக்கொரு
களித்த முகமடி பலத்த எதிரொலி.
முதற்காலடி உனதென்ற
உச்சிச்சமநிலக்களத்தே,
பொதித்திறங்கத் தேடியலைவாய்
சிறங்கைக் கரும்பள்ளம்,
-புறங்கையிலும்
பொருதுபுகழ் மீந்தொழுக
அலுத்துப்போன நீ.


'00, டிஸெம்பர் 04 22:04 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home