அலைஞனின் அலைகள்: கணம்

Friday, April 29, 2005

செய்விதி



பின்னால்,
"சிந்தாதீர் கண்ணீர், தோழர்களே"
என வந்ததொரு சலன விவரணம்.

இடைப்போதில்,
கன(க) விருதுகள் சொரிந்தன,
உள்ளூரிலும் உலகளாவியும்.

அதற்கும் முன்னாலிருந்து,
அவனுக்கும் ஒரு குடும்பம்;
அவன் காண, கதைக்க,
அவன்போல் பேனை சில
இருந்தன; இருந்தாற்போல்,
இறந்தன.

ஆதியிலிருந்து
அடித்துக்கொண்டே
எமதலை ~ எதிரலை.

எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்

முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.

பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா......


'05 ஏப், 29 வெள் 11:32 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home