போற்றுவேன் உனை
போற்றுவேன்
எனக்கொரு கவிதை தா;
பச்சைக்குழந்தை வாய்க் கட்டி எச்சிலெனப்
புத்தம்புதிதாக;
அடுத்தாற்போல், அலுத்துப்போய்விட்டதா,
அதனால், மீதி அத்தனை பூச்சொல்லும்
அங்குப் புக்காமற் பார்;
புராதனம்; புனிதம்; புராணம்; புரட்சி;
புணர்ச்சி; புழு; புழை; புடுக்கு.....
முக்கியமாய், அந்தப் பொல்லாஞ் சிறகு விரிக்கும் பொய், புனைவு.
காதலைப் பிடித்துக் கொஞ்சம் கையிற்குட் பொத்திவை;
அது கஷ்டமென்றால், காலுக்குள் மிதித்துப் பார்;
வாலாயப்படலாம்; யார் கண்டார்?
சீனி ஆகாதெனக்கு; ஏறினாற் செத்துப்போவேன்;
கொஞ்சம் காரமாய்ப் பாடு; கவடு விரித்துக் காமம்தான் கிடக்கிறதே.
அது செப்பித் தும்பி பறந்த பொழுது தொலைய
விட்டது பற்றித் தொடர் மீதி.
கொல் போரினையும் பாடு; வேண்டாமெனெனேன்; என்றாலும்,
நீ புரிந்த சமரினைக் கூறு; வேறு மனிதர் வினையைக்
கூறிட் டுனதாய்ச் சூறு கிழியச் சொட்டிச் சொட்டிச் செல்லாதே வழி.
அத்தனையேன்?
அகமென்றும் புறமென்றும் அடக்காமல் அகப்பட்டதெல்லாம் கவி சமை.
அவ்வளவுதான் சொல்வேன்.
இனி, எதைப் பற்றிப் பாடவென்று என்னைக் கேட்காதே;
வேண்டின், அந்த வெளி வெளிர்நீலக்காற்றாடியைப் பாடு; போ.
உனைப் போற்றுவேன்; இனி நீ என் கவி.
'05 பெப்., 16 புதன் 11:30 கிநிநே.
எனக்கொரு கவிதை தா;
பச்சைக்குழந்தை வாய்க் கட்டி எச்சிலெனப்
புத்தம்புதிதாக;
அடுத்தாற்போல், அலுத்துப்போய்விட்டதா,
அதனால், மீதி அத்தனை பூச்சொல்லும்
அங்குப் புக்காமற் பார்;
புராதனம்; புனிதம்; புராணம்; புரட்சி;
புணர்ச்சி; புழு; புழை; புடுக்கு.....
முக்கியமாய், அந்தப் பொல்லாஞ் சிறகு விரிக்கும் பொய், புனைவு.
காதலைப் பிடித்துக் கொஞ்சம் கையிற்குட் பொத்திவை;
அது கஷ்டமென்றால், காலுக்குள் மிதித்துப் பார்;
வாலாயப்படலாம்; யார் கண்டார்?
சீனி ஆகாதெனக்கு; ஏறினாற் செத்துப்போவேன்;
கொஞ்சம் காரமாய்ப் பாடு; கவடு விரித்துக் காமம்தான் கிடக்கிறதே.
அது செப்பித் தும்பி பறந்த பொழுது தொலைய
விட்டது பற்றித் தொடர் மீதி.
கொல் போரினையும் பாடு; வேண்டாமெனெனேன்; என்றாலும்,
நீ புரிந்த சமரினைக் கூறு; வேறு மனிதர் வினையைக்
கூறிட் டுனதாய்ச் சூறு கிழியச் சொட்டிச் சொட்டிச் செல்லாதே வழி.
அத்தனையேன்?
அகமென்றும் புறமென்றும் அடக்காமல் அகப்பட்டதெல்லாம் கவி சமை.
அவ்வளவுதான் சொல்வேன்.
இனி, எதைப் பற்றிப் பாடவென்று என்னைக் கேட்காதே;
வேண்டின், அந்த வெளி வெளிர்நீலக்காற்றாடியைப் பாடு; போ.
உனைப் போற்றுவேன்; இனி நீ என் கவி.
'05 பெப்., 16 புதன் 11:30 கிநிநே.
5பினà¯à®©à¯à®à¯à®à¯:
நேற்று நான் சமைத்த நாட்டியக் கவி:
கவிதரி. கவிகிட. கவிதக. கவிதீம். :)))
நான்தானே உம் கவி?!
By
Shankar, at Wednesday, February 16, 2005 2:01:00 PM
ஐயோ! ஐய்யய்யோ!! நான் நீர் கவியாகித் தாவினதைச் சத்தியமாகக் காணவில்லை சகோதரா. இப்படியாக கணத்திலே கண்ட குல்லா உம் கவித்தலைக்குக் கணக்கு என்று போட்டு வந்தால், நான் என்ன பண்ணுவேன்? நான் என்ன பண்ணுவேன்?!
By
-/பெயரிலி., at Wednesday, February 16, 2005 2:11:00 PM
பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு அய்யய்யோ கவிதை பிடிச்சிருக்கு !!!
By
இளங்கோ-டிசே, at Thursday, February 17, 2005 12:14:00 AM
கவிதாயினியென்றால் பிறாண்டிவிடுவேன்!
By
Shankar, at Thursday, February 17, 2005 2:08:00 PM
ச்சீய்
By
கறுப்பி, at Thursday, February 17, 2005 4:27:00 PM
Post a Comment
<< Home