அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

1

எனதென்ப தெனதும்
உனதென்ப துனதும்
அவனென்ப தவனும்
அமைவதா யாகாது.

எனது ளுனதும்
உனது ளவனும்
அவனு ளெனதும்
ழ்ந்து தூங்கும்.

என்னிருந் துன்னையும்
உன்னிருந் தவனையும்
அவனிருந் தென்னையும்
அவிழ்த்துப் பிரித்தென்ன
வதிங்கே?

என்னுள் நீயும்
உன்னுள் அவனும்
அவனுள் நானும்
இன்னும் மூவராய்
இதிலானோம்.

பெருவழக்கத்தே,
இறத்தல் என்பது
இடை யிணைந்தவை
விலகல்;
பிறத்தல் என்பது
முன் பிரிந்தவை
சேர்தல்.

மறைத்தவை உரித்து
மயங்கிப் புணர்தலும்கூட
புதிது பிறத்தலின்
பிறிதோர் புறநடைவிதி.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home