அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, October 25, 2005

உதிர்



ஒவ்வொருவரிடமும் இன்னொருவர்
எதையேனும் எதிர்பார்க்கின்றார்.
மண்ணிடம் மரத்தை
மரத்திடம் கிளையை
கிளையிடம் இலையை

இலையிடம் நீ
எதை எதிர்பார்ப்பாய்?

எவரும் கேட்க முன்,
இலையிடம் சொல்லாம்:
"எதையும் சொல்லாமல்
உதிர்ந்து
விடியமுன்
மண்ணிடம் போ."

'05, ஒக்., 25 செவ். 14:33 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home