அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, June 09, 2005

முடிக்காத நூல்


'05 யூன் 08, புத. 18:21 கிநிநே.


இதுவரை முடித்த நூல்களைப் பற்றிச் சொல்லக் கேட்கிறாய்.
நாவுக்கும் கண்டத்துக்குமிடை சின்னச்சொல்லும் சிக்கிப் புதைகிறேன்.
ஈதரைப் போல் புலனுக்குப் பிடியுணாது, உள்ளவிந்து பெருந்துயர் விரிகிறது.

முடிக்காத நூலொன்று என் முன்னுக்கிருக்கிறது, பார்த்தாயா?

ஒரு கைக்குழந்தைக்கு முன் வந்த நூல்; தவழ்ந்திருக்கிறது கை;
முகம் தடவுண்டிருக்கிறது; தவறிக் கால் விழுந்திருக்கிறது விரிந்து;
முன் மயிர்க்கற்றை முன்னும் பின்னுமாய் விரல் உழன்றிருக்கிறது;
நடந்திருக்கிறது என்னுடன், நகர்வாகனத்தில், நடைவழித்தடத்தில்,
வந்தாரை வரவேற்க வான்விமானக்காண்கூடத்திருக்கை இடுக்குள்.
அந்த ஓரத்திற் பார், ஒரு முனை உள் நசுங்கிப் போயிருக்கிறது முகம்
- மரக்கதவிடுக்கில் என் கைத்தவறு; பின்னும் சொல் பேசாமற் தொடர்ந்து,
நெடுநாளாய் விரல் முடுக்கித் தடவித் தாள் விரித்துத் தட ஒளி காண,
முடிக்காத நூலொன்று என் முன்னுக்கு யோகத்தவமிருக்கக் கண்டாயா?
நிழல் நோகாமல், இதுநாள் முடித்தன எண்ணி எப்படி நான் சொல்வேன்?

இழைத்து முடிக்காத நூலொன்றைச் சுவைத்து முடித்த பின் வா;
எடுத்துப் படித்ததில், இணங்கிப் பிடித்ததைச் சொல்வேன் நான்.

'05 யூன், 09 வியா. 12:05 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home