அலைஞனின் அலைகள்: கணம்

Monday, August 15, 2005

தவளைப்பகுப்பாய்வு


'05 ஓகஸ்ற் 14, ஞாயி. 11:58:45 கிநிநே.



எரிக்கும் வெயிலில்
எறிந்து கிடக்கிறது
நிழல் சிலுவை.

ஆடு மேய்ப்பர்கள் பேரில்
மேரி மக்தலேனா பேரில்
உருண்டு வரும் போகும்
மனிதச்சுமைமூட்டைகள்
மரமூட்டைத் தறிக்கும்
முதுகால் முதுகென்பால்.

தறித்து வெக்கை தகித்த
பசுமரத்தை பாவக்குருதி
ஒழுக்கித் தகைத்தார்; கழு
வலிக்கும் முள்முடிக்கும்
துளைந்த மூவாணிக்கும்
பாவச்சுமை பாய்ந்து.

இன்றைக்கு, நாள் மூன்றில்
ஆவி உயிர்த்தெழக் கல்வாரி
சேராது எரியச் செத்த சிலாகை
மரச்சிலுவைக்குத்தான் தேவை
சின்னதாயேனும் அஞ்சலிக்கவி,
அமைதி வழிபாடு, அடையாளம்;
வேண்டினால், கூட மூன்று
கூராணிகளுக்கும் குருதி
குத்துப்பட்டதற்காய் மேல்
முள்முடிக்கும் ஓரிரண்டு.

கொத்தித் தூக்குறு மேய்ப்பர்தம்
தொகைபாவம் சாய் சிலுவைதன்
பெருந்துக்கத்தைச் சேர்ந்திசையாய்
நாற்றிசையும் நாம் பாடுவோம், வா.

ஒவ்வொரு கைகூப்புக்கவிதைக்கும்
கரந்துண்டு ஒன்றுக்கு மேற்பட்டு
முளைமாற்றுக்கவிதை; எந்த கள
மாற்றுக்கவிதைக்கும் விதை சில
எதிர் மாற்றுக்கவிதை.


'05 ஓகஸ்ற், 15 திங். 15:11 கிநிநே.

2பின்னூடுகை:

  • மூக்கைத் தோண்டாதே. சட்டை செய்தல், முடிக்காத நூல்... இவகைளோடு தவளைப்பகுப்பாய்வு
    போன்றவற்றை இன்றுதான் படித்தேன். கவிதையும், கவித்துவம் கலந்த வரிகளும் என்று மிகவும் நல்லாயிருக்கின்றது எழுத்துநடை.

    By Blogger Chandravathanaa, at Tuesday, August 23, 2005 1:02:00 AM  

  • நன்றி

    By Blogger -/பெயரிலி., at Saturday, August 27, 2005 5:15:00 PM  

Post a Comment

<< Home