அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 08, 2015

அவஸ்தை

நீட்ஷேயும் செத்தார்; பூக்கோவும் பொறிந்தார்;
நானும் போனேன்.
நுள்ளான் கடவுள் மட்டும்
மல்லாக்காய்
கவட்டைத் திறந்து காட்டிக் கிடந்தார்
எலும்பு மனுசருக்குத் தீனி
ஏதொரு புதுப்பொல்லாப்புமின்றி.
உமக்கென்ன, புண்ணியன் நீர்;
கிடப்பீர்; கிழிப்பீர்.
அனந்தசயனத்தும் ஆத்தாவை
அரவணைத்துப் படுப்பீர்
கீழே ஒடுங்கி
முடுக்கியவருக்கெல்லோ தெரியும்
வஸ்துள் மூத்திர அவஸ்தை.

- போமோதாசன் மாமூசமூகத்துக்காய்ப் புனைந்தளித்தது

7/14/2008 02:44:00 PM

0பின்னூடுகை:

Post a Comment

<< Home