அலைஞனின் அலைகள்: கணம்

Friday, November 08, 2024

வாக்கு




என் பூவை இட்டு வந்தேன்

என்றாலும் கூடை நிரம்பவில்லை

என் குரலை எழுப்பி வந்தேன்

என்றாலும் பாடல் கேட்கவில்லை

என் கோட்டை இழுத்து வந்தேன்

என்றாலும் ஓவியம் முடியவில்லை

இட மறந்த அடுத்தவர் பூக்களும்

இசைக்க மறந்த அடுத்தவர் குரல்களும்

இழுக்க மறந்த அடுத்தவர் கோடுகளும்

இன்னொரு முறைக்கும்

இழுத்து வந்திருக்கின்றன 

எல்லாரிடமும் கறையோடு 

அறையப் பாவச்சிலுவையை!

தூக்கி அறையப்படுவோரே 

அறிவீரா? ஆணிக்குருதியில்

விட்ட கை ஆண்டவரதல்ல!

அறையப்பட்ட நும் கையே!

11/06/2024

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter