வாக்கு
என் பூவை இட்டு வந்தேன்
என்றாலும் கூடை நிரம்பவில்லை
என் குரலை எழுப்பி வந்தேன்
என்றாலும் பாடல் கேட்கவில்லை
என் கோட்டை இழுத்து வந்தேன்
என்றாலும் ஓவியம் முடியவில்லை
இட மறந்த அடுத்தவர் பூக்களும்
இசைக்க மறந்த அடுத்தவர் குரல்களும்
இழுக்க மறந்த அடுத்தவர் கோடுகளும்
இன்னொரு முறைக்கும்
இழுத்து வந்திருக்கின்றன
எல்லாரிடமும் கறையோடு
அறையப் பாவச்சிலுவையை!
தூக்கி அறையப்படுவோரே
அறிவீரா? ஆணிக்குருதியில்
விட்ட கை ஆண்டவரதல்ல!
அறையப்பட்ட நும் கையே!
11/06/2024
0பினà¯à®©à¯à®à¯à®à¯:
Post a Comment
<< Home