அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

திரித்துவமுள்

எழுதி முடித்தபின்மட்டும்
எங்கிருந்தோ செருமுது இந்த முள்.
தேவநிலைப்பட்ட புனிதத்தனிமுள் தான் என்பதாய்க் கனைதொனி.
உன்னோடு காறித்துப்பிய கரிநாக்குக் கழுவிக் கொப்புளித்து
சாப்பிட்டுப் பருகித் தாம்பூலம் தரித்துத் துலக்கியபின்னால்
காவடி வேல் குத்திக் கிழிக்குது அலகு; நாடி கீறப் பாயுது வெள்ளம்.
ஆள் தேடு அவதி நேரத்தில்,
அசுரத்திடுங்கு ஆகாக்காலத்தில்,
சேற்றாமைத்தலை தோற்றாமையில்
என்ன வாழுதோ இதற்கொரு தேவாம்சம்?
அடுத்த தொலைபேசலிலே அம்மாவிடம் கேட்கட்டுமோ,
"பள்ளிக்குப் போகவரச் சொன்ன
'பொறியெல்லாம் உன் போக்கு
புத்தகமும் வாய் பொத்தலுமாய்'
புத்திமதியை, பக்குவமாய்ப்
பொத்தி வைத்தீரோ
என் பயணப்பெட்டியிலே?"?

கேட்பதற்கும் கடிக்கக்கூடும்
இக்காலாணித்திருத்துவமுள்.

25, ஜனவரி 2003 - சனி 23:05 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home