அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

பிணந்தின்னியின் பிள்ளைபேரர்

பிறப்பிலேயே சொன்னால்
விளப்பம் சுலபம்:
-பிணந்தின்னியின் பிள்ளைபேரர் நாமென்பேன்.

நாமென்றால்,
பிணந்தின்னி பெற்றதிலே
பிணந்தின்று பெற்றுப்போட்டதிலே
பிணந்தின்றோர் மட்டும் கணக்கு;

என்னைப்போன்றோர், கணக்கென்பார் சிலர்;
கணக்கிடார் பிறர்.


பெரும்பிணந்தின்னி,
உடன் தின்ற பிள்ளை,
உதவித் தின்ற பேரன்
பிரவேசிக்கப் பூசாரி
கைவேப்பிலைமோப்பம்.

பூசகரென்போர்,
ஆதியிற் பிறப்பித்தோர்;
அவரிடம் உரித்துப்பெற்றோர்;
பெற்றோரின் பிடிப்பிலுற்றோர்;
மிச்சமாய், பிணந்தின்னி பெற்றதிலே
பிணந்தின்னார்; தின்று பெற்றதிலே
இன்னும் தின்னார்.

தின்ற பிள்ளைக்கு, பேரருக்கு
தில்லை எல்லைக்குள்ளும்
கள்ளமாய்த் திரியக் காரியம் தெரியும்.

பிள்ளையர்க்குத் தில்லை முக்கியம்;
எல்லை பிறழாமல் இயங்கிப்போனார்;
எல்லாப்பூசகர்க்கும் இறங்கிப்போனார்.

பேரருக்குத் தில்லைவெளிச்சம் தேவையில்லை;
எல்லைக்கப்பால் வெளியில் எல்லையில்லா ஒளி;
தில்லைக்குட் போகமுன்னே திறந்து திரிந்த களி.


என்னைப் பிள்ளையென்றார் சிலர்;
பேரனென்றார் பிறர்.

உள்ளுக்கும் வெளிக்கும்
என்னைப்போலவே
எதையும் பேசமறுத்தார்
பிணந்தின்னி.


03, ஒக்ரோபர், 2002

0பின்னூடுகை:

Post a Comment

<< Home