அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

கழிப்பறையிலே கவிதை வாசித்தலைப் பற்றி

அள்ளித் தின்னுதல் சுகம்;
இல்லையெனேன்.
மெல்லக் கவிதையைத் தின்னுதல் இன்னும் சுகம்.
இல்லையென்பீரோ?
சப்பித்தின்ற கவிதை செரிக்கும்;
செரித்ததிற் பிறக்கும் சக்தி.
செரியா மிச்சம் என்ன செய்வீர்?

துளியும் மிச்சமின்றிக் கழிப்பேன் நான்.

கழிப்பறையிற் காகிதப் புரட்டல்
என் சுகம்.
பிடி தின்னுதல் போலத் துருவிக் கழித்தலும்.
கழிக்கும்போது கவிதை படித்தல்
இன்னும் சுகம்.

கவிதை சுகம்;
கழித்தல் சுகம்;
கழிக்கும்போது கவிதை துடித்தல் சுகம்.
கண்டதை உண்ணல்போலத்தான்
கடுக்குவதை நீக்குதலும்.

"என்ன, எதிர்க்கலாசாரமா?" என்பதாய்ச் சிலர்.
சொல்லத் தெரியவில்லை.
தேடவும் தோன்றவில்லை.

ஒற்றைச் சத்தம் உவப்பான தென்ற வரை என் எல்லை.

29, டிசம்பர் 2002 சனி.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home