அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

ஒதுக்கம்

நிழல் தேய்ந்த நேரத்திலே
கல்லெறிவார் கூட்டத்திலிருந்து காணாமற்போனேன்.
ஒடித்த ஒரு விலாவென்பை உள்ளொளித்துக்கொண்டு
இல்லாச் சடத்தை இதுவென்றே
உருக்கொடுக்க அலைந்தேன் ஊரூராய்.
மீன்பிடிகுளங்களிலே தேங்கிய வலைகாரர் முகங்களை
மெய் சோர்ந்த பொழுதுகளில் கடந்து நடந்தேன்.
பறித்ததைப் பறிவிட்டுக் கால்கீழ்க்குட்டை சேந்திப் பின் பறிக்கும்
காலச்சேதத்தைக் கண்டும் காணேனாய்ப்
பாதைக்கல் விலக்கிப் போந்தேன் மேலும் கால்.
பார்த்த ஆறெல்லாம் பகுக்க இத்தனையாய் வகைமச்சம்;
அள்ளும் வலையெல்லாம் சொல்லடங்கிப்போன எண்கள்.
அகத்தில் மழைக்காட்சி துளி முளைக்க பயிர் முளைக்க
அடுத்தவர் கவியோரத்து வேலிக்கப்பால் மட்டும்
காலாற நடக்கின்றேன் காற்றுவெளியில் நான்.
காற்சட்டைப் பைகளுள்ளே என்புக் கணக்குப் போடும் கைகள்.
நடத்தலுமாகும் நாளைக்கான தவம்;
தேவத்துவம்.

26, ஜனவரி 2003 - ஞாயிறு 00:39 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter