அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

Tremors*

இதை வாசிக்க முனையும் ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள். இதை வாசி க்கமுன்னர், உங்களுக்கு நம்பிக்கையான எந்த இணையச் செய்தித்தளத்திற்கேனும் சென்று, கண்ணைக் குத்தும் தலைப்புச்செய்திகளையும் கண்டுகொள்ளாத சின்ன எழுத்துச் சில்லறைச்செய்திகளையும் ஓரிரு கணங்கள் தயவு செய்து நுனி மேயவும் அல்லது முகரவாவது செய்யவும். நன்றி.

மலைத்துப்போய் நிற்கிறோம்;
ஆள்சேனை யம்பெல்லாம் ஊர்கூவியழைத்து
இழுத்துப்போகின்ற பெருமண்குதிரை ஊர்வலம்.
முள் வேலிக்கப்பால் முகத்திரையட்டி
நின் றெட்டியெட்டிப் பார்த்தயர்ந்து
மலைத்துப்போயிருக்கும் மனம்.

மல்லுக்கட்டி ஊர் மாமல்லரெல்லாம் மாய்ந்தாலும்,
உதிர்மண்குதிரையுங்கூட உவர்மணற்றெரு
கட்டியிழுக்கத் திமிறுதாம் கழுத்து; முட்டுது;
மூசமூச முகம் வெட்டுது திசை வேறெங்கோ போக.
கட்டுப்படாதாம்; கடலுக்கு வராதாம்; கரை கடப்ப,
மூளித்திட்டுத்திட்டென்று கரையமுடியாதாம் முழுவுரு.

மொத்தத்தில், மொக்குப்பரிமுகத்து முக்கலில் முறுக்கலில்
சுத்தமாய்ச் சத்தமற்று இலயித்திருந்தோம் சித்தம்; சினந்தோம்.
சண்டியர்கள் சாட்டையடிக்கு, வானரமாய் வால் சுழற்றிக் குதித்தோம்;
"சரிதான்; பரி சவப்படப் போடு சட்ட"மெனச் சத்தமிட்டோம் வானதிர.

நிகழ்சுழல் பத்துமுறை சுற்றியதாம்; சூழல் முற்றிலும் தொடங்கியது முதலிருந்து.
சண்டை சலிப்பேறச் சற்றே குனிந்தோம்; அலை சலனித்தோடியது நிலமணல்.

மலைபடுமண்மாவுக்குக்கீழே மண்ணுள்ளே
கண்படாது கலைந்தோடும் திமில் வளையங்கள்
கால் சுற்றிக் கொடியேறி ள் கவரும்; நெளியும்;
நெருக்கி நொருக்கித்தின்னும் இரை;
அரக்கும் அடுத்த நிலை தரைக்குள்.

உள்ளே பாதாளம்; தடதடத்து உலாவும்
மலைப்பாம்பும் மண்ணுண்ணிப்பூதங்களும்.
ஒன்றையன்று பின்னிக்கொள்ளும்; பின்,
பிணங்கும்; பேரிடி முழக்கமிடும். பீறிட்டு
விலங்காகிப் பிளந்தெழும் பெரும்பூமி;
அள்ளி விழுங்கும், அஸ்வ வேடிக்கை பார்க்கும்
ஓரிரு பட்டாளத்து முட்டாளாள் முழுக்க.
முழுத்திருப்தி; முடங்கும் தரையுள்;
மோகத்துள் மூர்க்கமாகி
முயங்கிக் களிக்கும்
முன்னைக்கும் பின்னைக்கும்.
மாடாகி மலம் கக்கவும் கூடும் மயக்கத்தே.

மண்ணுண்ணிப்பூதங்கள் தம்முள்ளே மணம் முடிக்கும்;
மலைப்பாம்புக்கூட்டம் குட்டியிட்டுக் குதூகலிக்கும்.
தமக்கு வேண்டின், பிரி நாக்கைப் பெருக்கிப் பரந்து
நிலமண்ணைப் பிளக்கும்; சுழல்தலை கண்ணுடன் மிதக்கும்;
வெறுவிண்ணை, வேடிக்கைப்பரியை, பட்டாளத்தைப் பார்க்கும்
உத்தியறு உன்னை விழுங்கும்; ஏமாளி என்னை விழுங்கும்.
பின்னையேன் மண்பரியை, பின்னலையும் திண்தோளரை
இன்னும் தம்வழியே இவை உள்ளள்ளவில்லையெனில்.
கொஞ்சம் நில், குனி, கூர்ந்து கவனி, நிதானி. . . . .

. . . . . இந்தப் பரி பாகர் பாம்பினைத்தான்,
பதி பசு பாசமென்பேன் நான்;
பிதா சுதன் வியென்பாய் நீ.

என்னவோ போ!
எம்மையே ஏமாற்ற வாகுமென்றால்,
தரை தடுக்கி எடுத்ததெல்லாம்
தலை சிறந்த தத்துவம்தான்.

'01 நவம்பர், 11 ஞாயிறு 02:02 மநிநே.
-----

*இ·து ஒரு திரைப்படத்தலைப்பு(ம்கூட)
http://us.imdb.com/Title?0100814

0பின்னூடுகை:

Post a Comment

<< Home