அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

வழுப்படு தலைப்பிலி -III

எல்லாம் முடிந்தபின்னால்,
கால்களில் நீர் உரசிக்கொண்டோம்;
கைகளைக் கழுவிக்கொண்டோம்.
நகரும் போது நரம்பிலே நன்னியது கொக்கி
- சேற்றிலே நனைத்துக்கொள்ளவா பிறந்தன கைகள்?

காற்றைக் கிழித்துக் கரிக்கோட்டைக் கீறிக்கொண்டாலும்,
கலங்கத்தான் செய்கிறது....
மூளியுருவைக் கீறிக் கெட்டது புல்வெளி;
மழுங்குரு உடல் கெளித்தது விழி, கோணியது வாய்.
படைத்த பாவம் புடைத்துப் பருத்து விடை கேட்டு
நகர்ந்தது அலைபாதம்தொட்டுப் பின்னால் நாயாய்
- ஒயிலை மழுக்கவா பிறந்தன கரிகிறுக்கும் விரல்கள்?

ஒதுக்கப்பட்ட ஓலைக்கப்பாலான அகல்வெளியில்
தவிர்க்கப்பட்ட மனைகளையும் வரியப்பட்ட வேலிகளையும்
நினைத்தும் உடைத்தும் போன தடங்கள் தளராது; தாளப்பட்டுக் கேட்கும்
- விலக்கப்பட்ட நிலங்களை மிதிக்கவா பிறந்தன பாதங்கள்?

எல்லாம் முடிந்தபின்னால்,
இரைத்திறைத்து எல்லாவற்றையும்தான் கழுவிக்கொண்டோம் என்றுதான் பட்டது
- இவ்வளவும் எதற்கென்ற எண்ணத்தைத்தவிரவோ??


'01 ஒக்ரோபர், மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home