அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

இன்றைக்கென் கவிதை பற்றி

இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.

இன்றைக்கென் கவிதை எதுபற்றியும் இராது -
இல்லை என்பது பற்றி; இருப்பது பற்றிக்கூட.

துள்ளித்திரிந்த காற்றில் கை
அள்ளித் தெளிந்து மிதக்க, நாள்.
உள்ளது அல்லது பிரியாது போம் பொழுது.
மெல்ல முகிழ்ந்தழியும் பொன்நிலவும்
கள்ளத்திற் சிரிக்கும் கன்னம் குழிக்க.

வந்ததைத் தின்று வருவதைக் கண்டு
சென்றதைப் பேசிச் செல்லவே இந்நாள்.
பெற்றது அழிவு; அற்றது செலவு;
ஒற்றுமை பார்க்கில் உள்ளது நிறைவு.

இப்படி ஒரு நாள் இன்றைக்கு மட்டுந்தான்,
கவிதைச் சொற்படி வளரும் என்றேன்; இன்றேல்,
இன்றைக்கென் கவிதை பற்றி எவருக்கும் தெரியாது.

Sun Feb 15, 2004 8:31 pm

0பின்னூடுகை:

Post a Comment

<< Home