அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

ஞமலி விடு தூ!தூ!

எழுதுவதுக்கு முன்னால், சந்தர்ப்பம்கூறுதலென்பதிலே பொதுவிலே எனக்கு நம்பி
க்கையில்லை. இந்தவிடத்திலே இது தவிர்க்கமுடியாததாலே:

ஜெயமோகனின் அண்மைய கணையாழிச்செவ்வியை முன்னிட்டு பதிவுகள்
கருத்துத்தளத்திலே இன்று பேசப்பட்டதினை வாசித்ததின் தொடர்ச்சியாகக் குறி
த்துக்கொண்டதிது.

இப்போதெல்லாம் இலக்கியம் அச்சடிப்பது மாசாத்துவான்கள் சங்கதியாய்ப் போச்சு.
கொல்லைப்புறத்திலே நானொரு இலக்கியம் படைத்தால், கூடத்துநாற்காலியிலிருந்து
நீர் முகவுரை எழுதும்; காசை நான் விட்டால், என் சகலை அம்மான் ஆராச்சும் பதி
க்கலாம். குசினிப்புறத்திலே நீர் வைத்திருக்கும் மடைப்பள்ளிக்காரர் மதிப்புரையைப் பரி
ந்துரையாகவே புரிந்தெழுதித்தருவார். புத்தகம், முகவரி, மதிப்புரை வந்த சேதியை
வாலயத்துக்குஞ்சுகள் கொண்டு வந்து சேர்க்கவேண்டிய இடத்திலே சேர்க்கும். ஆதரி
த்து வரும் சேதியைக் கொண்டுபோய் நாற்காலிக்காரருக்குச் சேர்க்கும்; எதிர்த்தால்,
பாய்ந்து விறாண்டிக்கடிக்கும். இத்தால் அறிய வேண்டியது யாதெனில், படைப்பிலக்கி
யம் என்பது பண்டம் விற்கும் விளம்பர உத்தியினால் வெல்லப்படுவதாக்கும். சிற்றிலக்கி
யம் பேரிலக்கியம் என்ற பேதமில்லாமலே இந்த பேய்க்காட்டல் நிகழ்கிறது. இந்த நி
லையிலே ஒதுங்கி, சிற்றிலக்கியம்/பேரிலக்கியம், பெரும்பத்திரிகை/சிறுபத்திரிகை என்ற
கறுப்பு/வெள்ளை தீற்றுக்களுக்குள்ளே அடங்காது தான் மட்டும் ஒளிர நிற்பதே எழுத
முயல்கிறவன் முதலிலே எண்ணிக்கொள்ளவேண்டியதென்று நினைக்கிறேன். பெரி
யோர் முகவுரை, நூலனுப்பிப் பெறும் அறிந்தார் மதிப்புரை, நாட்டுக்கு நாடோடி புரி
ந்துணர்வு விழாவெடுப்பு என்பனவற்றின் விபரங்களோடு என்னை நோக்கி
உருண்டோடி வரும் "புத்தம்புது வீரிய இலக்கிய உலகத்தை" சப்பித்துப்பின
கரும்புச்சக்கை என்று மட்டுமே எண்ணிக்கொண்டு திறக்கிறேன். தனியே Marketing
Technique இன் வெற்றி மட்டுமே நல்ல படைப்பென்றதாகி விடாது என்பதிலே நம்பி
க்கை இன்னும் கொண்ட ஓரிருவர்களிலே நானும் ஒருவன். ஞமலி விடு தூ!தூ!

==================================================

வலை ஞமலி! வலை ஞமலி!!
எடுத்துப்போவாயோ ஆசான் குட்டிச்சாத்தானுக் கென் சேதி!
தனியிடம் கணியிலே தவித்துத் தமிழெழுதி
பதிவிடமில்லா தலையும் என் பெயர் பற்றியும்
பரிவுடன் அவர் மனம் பதியச்சொல்லு

~செ(¡)ல் சேதி~

அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்


வேணுமென்றால் வாரும்
வெளிநாட்டில் வீசுவேன் நானும் உமக்குக் காத்து
நீரும் வீசவேணும் உள்நாட்டில் எனக்கும் பார்த்து
தேஜஸ் கூடத்துநாற்காலியிலே சீமானே உம் சேவை
கொல்லைப்புலத்துக்குக் கூட்டாளி நான் தமிழ்க்காவல்
குசினிப்புறத்துக்கு ஆராச்சும் நீர் பார்த்துப்போட்டால், அவராச்சு.
உமக்கு வாலாட்டும் எலும்பு நாய் எனக்கும் வாலாயப்படவேணும்.

எனைப் பாரும் தேவே! இறங்கி வாரும் ஏறே!
இந்தப்பக்கம் நான் தமிழரசன் உந்தப்பக்கம் நீர்
இந்த மாசம் இருக்குங் காசைவிட்டு என்னொரு கவித்தொகுதி;
நீர் முகவுரை; பதிப்பார் நம் பங்காளி; மடைப்பள்ளிக்காரர் விமர்சனம்
தாம்பாளம் எடுத்துப்போகவும் எதிர்த்தாரை எடுத்தெறியவும்
வாலாயப்பட்ட பூராயத்தெரியா வேட்டைநாய்த்தொகுதி.
அடுத்த மாசம் கட்டாயம் அறிஞர் உமது எட்டுத்தொகுதி காவியத்துக்கு
இந்தப்பக்கம் எடுப்போம் நாம் பிளாஸ்ரிக் குட்டிவாழை கட்டி ஆராத்தி.


ஆகையினால்,
அடுத்த முறையாச்சும் தமிழ் ஆண்டே,
தயைகூர்ந்து தமிழ்படைத்த
ஆகாக்காய் அரைவேக்காட்டு
ஊறுகாய் பெயரிலேனும்
உள்நுழையும் எனதையும்.
பாரும்,
ஆறு கவி நாலு கதை நானும் எழுதியுள்ளேன்.
குறித்துக்கொள்ளும்;
கூடவே உம்மை விதந்து ஓரிரு பதில் முறியும்

~செ(¡)ல்சேதி முடிவு~

சேதி எடுத்துப்போகும் எழில் நாயே
நடனம் சுழிக்குமுன் துடிவாலுக்கும் நன்றி.

இணைய நாயே!! இணைய நாயே!!
எடுத்துப்போகாயோ என் ஆசான் குட்டிச்சாத்தானுக்கு
இவ்விணையத்து ஏகலைவன் ஏக்கச்சேதி!


~31, ஜூலை '03 வியாழன்

(முதற்கிறுக்கல்; திருத்தமும் பின்னால் வரலாம்; வருத்தமும் பின்னால் வரலாம்)

0பின்னூடுகை:

Post a Comment

<< Home