அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

கவிதையும் கதையும்

கவிதை எழுதுவதென்பது கடிலாஸ்கோப்பிலே
குறுணிவண்ணக்கண்ணாடிச்சிதறல் போட்டுக் குலுக்குதல் போலாம்;
கவிதை எழுதுவதென்பது இருண்டலர்ந்த கண்ணுக்குக்
குளிர்க்கண்ணாடி போர்த்திச் சூரியோதயம் சுட்டிக்காட்டுதலாம்;
கவிதை எழுதுவதென்பது கச்சற்பொருளுக்குச்
சக்கரைப்பாகு சுற்றி அண்ணாக்கழுத்தி நெக்குருக்குவதலாம்.

நெருப்பிலே உடைப்பிலே உருக்கி நொருக்கிப் போடுகிறேன்
என்னிடம் கேட்கப்பட்ட காக்காய்ப்பொன் கவிதைகளின் சொற்களை.
முரட்டுப்பாதை போகும் கறுப்புக்குதிரை
ஒன்றில் உதை தள்ளும்; அன்றில் கதை சொல்லும்.

Tue May 4, 2004 11:07 am

0பின்னூடுகை:

Post a Comment

<< Home