அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் IV

வேடனைப் போலோர் வேடம் கொள்ளும் வேளையிது

காலையும் மாலையும் கண்ணியும் கல்லும்
கோணியும் கொண்டலையும் கோரவனமானது
இவ்விராட்சதத்தேசம்.

தேகமும் தேடலும் எதேஷ்டமென்றிராமல்
தின்னப் புள் நாடி தின்னு புலி தள்ளி
விரித்த கண்ணியின் விழிகண்ணெல்லாம் கச்சிதமாய்
பனி நுனித்த பசும்புல் மெல்லப் பறியும்
கலையும் கற்றே வாழலிவ்வூழெனக்
களைக்கக் களைக்கக் கலைக்கும் வேளை.

தேரத் தின்னா ஆதிவேடன் உள்ளானாயினும்.
ஆகாரம் உண்ணா வேடன் என்பான் இல்லான்.
வேடம் வேடனைப் போலாகும் வேளையாம் இது.

~13 மே 2004, வியாழன் 02:58 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home