அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் VII

என்னைக் கேட்டால் எல்லார் எழில்
இரவுகளையும் பறித்துக்கொள்வோமென்பேன்.

கூடை கிள்ளிய பூவையும் கிணறு அள்ளிய நீரையும்போல்,
அனைவரின் மெல்லா இரவுகளையும் மேல் மேலாய்க்
குவித்து மலையாய்ப் போடுவோம் வா முடிச்சு.

தெரிகின்ற எல்லா விழிகளெல்லாம் இடித்துக் காயட்டும் கடிவெயில்;
என்னைக் கேட்டால், இன்றும் சொல்வேன்; என்றுந்தான் -
மதி தணிக்கின்ற விழி துளிர்க்கும் மது இரவு வேண்டாம்;
எரிகின்ற விழிகள் மட்டுமே எழவென்று, நிலை மாறாமல்
நெருங்கதிரலையும் பகல் பொருந்தப் பொருதிப் பொருதி
எல்லார் பொல்லா இரவுகளையும் பறித்துக்கொல்வோமென்பேன்,
என்னைக் கேட்டால் நீ இன்றைக்கும் இனி என்றைக்கும்

~13 மே 2004, வியாழன் 03:44 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home