அலைஞனின் அலைகள்: கணம்

Tuesday, May 31, 2005

அகாலநிலை


படம்: '05 மே 27, வெள். 14:18 கிநிநே.


மாதம் ஆறேழாய்,
ஆளாளுக்கு முடுக்குகிற நேரத்திலே சந்தித்துக்கொண்டிருந்தோம்
- அவஸ்தையை இறக்குமுன்னோ, இறக்கிக்கொண்டோ, பின்னோ.

நீர் பிரிந்தால், ஒரு வரியிற் காலநிலை கதையாகும்;
பிரியாமற் தடங்கின், குழாயின் வேகங்கூடக் குறையாகும்.
கை கழுவி, காற்றில் நானும் கடதாசியில் அவரும் காய,
மீள வரும் காலநிலை மெல்ல எமக்குள்,
குளிராய், சூடாய், காற்றாய்,
நேற்றுக்காய், நாளைக்காய்.

நான் கதவு திறக்க, தட்டு மேலுக்குப் போவார்;
அவர் திறக்கக் கதவு, நான், கீழ்த்தட்டுக்கு.

சென்ற நாளது ஏழாய், என் முடுக்கில்,
நான் போய் வருகிறேன் தனியாய்.

ஆள் பேரைத்தான் விட்டோம்; எண்ணிப்
பேசு எண்ணையேனும் பெற்றிருக்கலாம்
-என் மேலே படுவது கூதலா கொளுத்தலா
என இனி வேறாரைப் போய்க் கேட்பதாம் நான்?

'05 மே, 31 செவ். 17:27 கிநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home