அலைஞனின் அலைகள்: கணம்

Wednesday, January 07, 2015

கதாகாலம்*


சீர்திருத்தக்காரன் சீந்தாமல்

சிதிலமாய்ச் சிதறிச் சரிகிறான்  
கொல்லப்பட்டவன் கதைகளைக்
கொலைகாரன் எழுதுகின்றான்

இடைத்தரகன் கூலிக்குச் சூல் சுமக்கிறான்

மாடுமேய்ப்பவன் எல்லைக்கோடுக்கப்பாலும்
பெருவிரலழித்து வந்து போகிறான்
இத்தனைக்குப்பின்னும்
எஞ்சியவன் விந்தி 
உந்திக்கொண்டிருக்கிறான்

சவத்தின் இலக்கியம்,
பனியாய்ப் பொழிந்து
மழையாய்ப் பெருகி
கதிராய் எரித்து
-கடந்து போகிறது 
காலம்.

மனிதனின் மகத்தான பதக்கத்தை
உன்னதமாய் நீயே வைத்துக்
கொ...............ல்.
Thursday, August 09, 2012
* கதாகாலம்:  இத்தலைப்பு, தேவகாந்தனின் நூலின் தலைப்பிலிருந்து இரவல் எடுக்கப்பட்டது

0பின்னூடுகை:

Post a Comment

<< Home