அலைஞனின் அலைகள்: கணம்

Sunday, August 08, 2021

இழவுக்கவிதை

 ஒரு இழவுக்கவிதையை யாரும் எழுதலாம்.

அது கவிதைக்கான சின்னப்

பொத்தற்சட்டையைப் 

போட்டிருக்கிறதா என்பதுகூட முக்கியமில்லை.

நன்கு கவனி

இங்கே!

யாருடைய துண்டுக்கவிதையும் எவருடைய துகட்கவிதைக்குள்ளும் கட்டெறும்பு விடக்கூடாது!

அடுத்தார் சொற்புலங்களிலே பைய ஊரும் எந்திரக்கவிதையின் கேவலத்தை எப்பட்டுச்சட்டையையும் மறைக்கப்போவதில்லை!

சொல்லப்போனால், ஒரு பொது இழவுக்கவிதைக்குச் சொல் முக்கியமில்லை; 

சொல்வார்கூட.

சொல்லப்பட்டவரிலும் சொல்தருணத்திலும் மட்டும்

ஒரு நற்கவிதை 

இளங்கிளுவங்கதியாலாய்

தன் நிலைக்கால்களை ஊன்றிப் பூத்திருக்கின்றது.



கவிதை என்றால், 

கவிதையல்லாததுவுமேதான்



வடிவமற்றது

இழவு!



05/17/2020 ஞா 07:46 கிநிநே


0பின்னூடுகை:

Post a Comment

<< Home