அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

14

எனக்கென்று ஒதுக்கித்தரப்பட்டது
எண்ணுக்கும் எழுத்துக்கும் இடைப்பட்ட
உள்ளங்கையகல ஒற்றைப்பாதை.

சறுக்கினாலன்றி,
சமன் பிரித்துச் செலுத்தமுடியாத
சித்தம்பிழறிய சாரத்தியம் எனது.

எழுத்தைப் பறித்து எண்ணுக்குள்ளும்
எண்ணும்போது எழுத்துட் கிடந்தும்
நாட்டிய எல்லாவற்றையும் நட்டப்பட்ட
கோட்டைக்கணக்கு.

வலில் அள்ளித்தின்னக்
கையெல்லாம்
இலக்கம்புழுத்த எண்ணவல்;
நக்கித் தின்னமுன் நான் எறிந்து
எழுத்துத்திண்ணைக்கு
எள்ளுக்குத் தாவினால்,
எழுத்தெங்கே எண்ணெங்கே
என்பதிருக்கட்டும்;
எதிர்க்காற்றுப்பட்டால்
கைப்பிடிக்க
என் உத்தரநிலையெங்கே?

என்றாலும்,
இலக்கத்துக்கும் இலக்கியத்துக்கும்
இடைப்பட்டு ஒற்றைத்தரைப்பாதைமேலாய்
தலை எட்டியெட்டிப்பாய்கிறது
என் இழவுபிடித்த எண்ண இலக்கு.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home