அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

8

இரத்தப்பூவிளிம்பில்
பச்சையும் பழுப்புமாய்
இரட்டைப் பட்டாம்பூச்சிகள்
கலக்கக்கண்டோம்.

கவிதைகளை அவர்களும்
கலவிகளை இவர்களும்
தொடர்நிகழ்வாய் உலாத்த
தெருக்கல்யாணமுருங்கையை
முறித்துக்கொண்டேன்
நான்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home