அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

இலக்கியவிசாரியின் எடுகோள்கள்

உள்ளே தூங்கிக்கொண்டிருப்பது கலை உலகம்
வெளியே விழித்துக்கொண்டிருக்கும்
ஒற்றைக்காவல்நாய், நான் மட்டும்
- தெளிந்த தூக்கம் வராதலைபவன் நான் என்றாலும் நீ.

ஒட்டி எழுதியவன் உருப்பட வழியில்லாதான்;
வெட்டியெழுது; விரட்டிப்போ வேறாள் கருத்து;
சுற்றி வை சூழல், உன் சொல் கேட்டு
மற்றோனை அறம் பாடும் மத்தளச்சுற்றம்;
உள்ளபடி உணர்ந்துகொள்
- உண்மை என்பதும் உற்பத்தியாவதே.

அங்கு எந்தப்பக்கத்தும் உருள்வது இருளும் மருளும்;
இந்தப்பக்கம் வா; இதோ என் சூரியசாம்ராஜ்யம்.
என்னைப் பற்றிக்கொள்; இறுக்கியணை உடலம்;
இழு கோட்டை எமக்கப்பால் - இந்தப்புறம், அந்தப்புறம்;
இனிச் சொல்வோம் - இந்த இரட்டையரைக் கோட்டை விட்ட
விமர்சக மட்டியராற் செத்ததாம் இற்றைமொழியின் எழுத்து.

உனக்குத் தெரிந்த தெதுவோ தெரியவில்லை,
எனக்குத் தெரிந்து என்னதெல்லாம் இலக்கியம்
-உன்னவை,
என்னைத் தழுவாவிடத்தெல்லாம்,
நான் உரக்க முன்னவை சொன்னவதாம்.

18, நவம்பர் 2001 சனி 15:17 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home