அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

பூச்சித்தேசத்தாருக்குப் பொதுவாக

நெடுநாளாக,
நெருப்புவால் நீண்டு
இவன் நகர் சுற்றத்தாவும் என் பதிலை
சுண்டெலிச்சுருக்கிலேனும் கிறுக்க நினைக்கிறேன்;
சந்தைத்தெருமுடக்கில்
அதிரும் காலடிக்குப் அரைவிழி வெளித்து,
தலை பதுங்கி அயர்ந்து கொள்ளும்
பூனைப்பதில் அது.

உள்ள நாலு கல்லை உயரக்கடாசி
ஒன்றிங்கு அங்கு தொங்கத் துரத்தும்
இவனின் கைகளிற் சுண்டிப் பறித்து
சுற்றும் சிறார் கோணல் முகங் காணவும்
அங்கங்கு முளைத்து மயிர்முறுக்கி
அடங்கும்
ஆவல்.

எல்லாத்தெரு போகும் திக்கும் தன் இல்லென்பான்;
இல்லா இலக்கில் முட்திரி வைப்பான்; முளைத்தது தன்
மூக்குக்குப் பொருந்தாமல் முறித்துப்போடுவான்
விரலுக்கும் நாசிக்கும் ஊசிவலை பின்னலாம்...
...ஆயினும்,
சாடிக்காடியில் சஞ்சலித்துப் புகுந்திருக்கிறது கடிதம்.

நேற்றுநாளையிடை நெருக்கும்
இற்றைக்கொதிப்புத் தாவி
தீவாலைத் திரி சுற்றேலாத்தினங்கள்
வீட்டுத்தாழ்வாரங்கள்.

என்றாலும்,
"எல்லாமே என்னாலே" எனும் இவனுக்கு
என்றாவது இருந்து
எண்ணி எண்ணி அரிசி
எழுத்துப் பொறுக்கி
எழுதக்கூடும் நான்
இன்றியலா இராவணன்மீசைகளை.

02, ஒக்ரோபர் 2002

0பின்னூடுகை:

Post a Comment

<< Home