அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

எமக்கானது/எம்மாலானது

குழம்பியிருக்கிறேன்
-நிரம்ப, உட்குடம் ததும்பத் ததும்ப.
குழப்பம் - மனிதரால், நிகழ்வால்
மேலாய், - எரிநாள் நெடுக்க
பேசியதை மீள மூளப் பேசவேண்டிய
மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால்.
ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும்,
ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்;
"நான் குழம்பியிருக்கிறேன் - முக்கியமாய்
பேசப்படும் நான் பிம்பமில்லாதா னானதினால்."

இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய்
தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே
அதிர்கிறது சொத்திக்கூத்து.
கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும்
கையைக்கோர்த்துக்கொண்டு
துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம்.
இடையிடையே எனதென்ற கடிதத்தில்
என்னைக் கொள்ளையடித்தவனுக்கும்
இறுக்கிக் விட்டோம் குத்தென
ஏராளமிட்டுக்கொண்டார் கையப்பம் -
என் பெயரால், உன் பெயரால்
ஊரிருந்தார், இறந்தார்
உருப்பெயர்ந்தார், பெயரார்
எல்லார் பெருகுதுயர் பெயராலும்.
அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி
அரசு விளம்பரப்பொறி பரந்த சுவரில்
மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி
மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா,
மெய் சொல்.
'கொள்கைக்காரன்', 'கொள்ளைக்காரன்'
எல்லாச் சொற்களும் நானே வகுத்தேன்
என்ற (அ)மங்கச்செய்திச்செவியுறுவீர் நாளை;
நீங்கள் நெறி வகுத்தீரென்றும் நானுந்தான்.

முகமில்லார் எம்பெயரால் முழுவதும்
இனியும் நடக்குமாம் முருங்கைமரமேற்றம்.

நம்பங்காய் எம் கையை முறித்துக் கொள்வோம் வா
- அழுகு கவிதையேனும் அழுகை பிழைத்துப் போகட்டும்
அடுத்த இயலு தலைமுறைக்கும் எஞ்சுகிற பூக்களுக்கும் .

'03 மார்ச், 20 வியாழன் 18:06 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home