அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

தாவுகை

கல்பற்றியவனுக்கு நீர் பிரிதலாய்
நுனிநோ நூற்று இறுக்கத்துடன் கழிகிறது
நேரம்.

கொப்புகளிடைப் பற்றத் தாவும்போது,
கீழே தெரிகிறது நகராப் புல்நிலம்.

சுண்டுவிரல் எதேச்சையிலே துளி சொட்டிப்
பரவுகிறது கறையின் கரை.

அரிசிகளைச் சேகரித்துச் சொல்லமுன்
அவதிப்படும் கொப்பும் சலரோகமும்.

'01, ஏப்ரல் 30

0பின்னூடுகை:

Post a Comment

<< Home