அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

அம்பறாத்தூணியுடன் அலைதல்

வாழ்க்கைக்கு
வேட்டுவப்பிழைப்பில்லையென்றாலும்,
அங்குமிங்கும் அம்பறாத்தூணியுடன்
அலைந்துகொண்டிருத்தல்
ஆகவேண்டியதாயிற்று.


கீச்சிட்ட குருவிகள் எக்கிக்
கக்கிப் பீச்சிட்ட துளியெச்சம்.

உள்ளங்காற்சருகுக்குள்
அருகுதடவி நகரும் அவதிச்சாரை.

சுண்டுவிரற்றுண்டு வெண்தேங்காய்ச்சொட்டுக்குக்
கிளை தொங்கித் தலைதாக்கும் இளமந்தி.

கடக்குமொரு பாட்டையின் உதைத்து நகரும் ஓயாப்புரவி.

குறியிட்ட பார்வைச் சுனைத்தலை மட்டும்
விரித்த பின்முதுகே ஒளிர்த்து முனைப்படுத்தி
ஒளிந்துலவும் மரத்தறை இருள் நிழல்.


இவற்றிடையே கால்மிதி வசப்படும்
சச்சரவுக்குறி சொல்
நாத்தடித்த பல்லியிரண்டைப்
பல்குத்திச்சிராயுச்சிப் புட்டு நடந்தாலும்
வெற்றுவெருட்டலுக்கேனும்,
வீண்வேடிக்கையாய்
அம்பறாத்தூணியுடன்
அலைந்தாகவேண்டியதாயிற்று.

June 07, 2001 Thurs 4:54 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home