அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

நன்றிக்கடன்

"வரண்டபொழுதுகளில் நெடுத்து நீண்டேன்;
நான் நடந்த வனப் பாலையின் மேலாற்
பாதங்களுக்கு குடைப்பாதையாய் வளைந்தேன்;
அளந்தடி கிடந்தேன்; வால் நீட்டித் தொடந்தேன்;
இருண்ட என் நிழலாலே பிளந்த தரையைத்
தலைவருடிப் பிடரி தேய்த்துத் தடவிக்கொண்டேன்;
பின்பும் நடந்தேன் பெருந்தூரம்.
இதுநாள் எனைத் தாங்கிய பூமியின்
இதய அக்கினியைக் கணம் என்னுடல்
ஏந்தித் தணித்தேனும் இழந்தேன்
இற்றைக்கடனின் ஒரு பகுதி... முதுகில் நடுப்
பகலின்னும் பல் நெருமி உதைத் துறைத்தது"

0பின்னூடுகை:

Post a Comment

<< Home