அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

பகிர் பூட்டு

நட்ட கிளை நாவல் இடறிச் சரிக்கவும்
வீசிப்பரவு குழல் குருதிபூசி முடிக்கவும்
வில்லங்கப்படுத்தும் பொழுதுக்குப் பதுங்கி
ஒரு நிறைகள்ளனைப் போல் நடக்கும்
வேளையும் எனக்குண்டு.

கழற்ற முடியாத காலாணிபோல
அறுக்க அறுக்கவும் அடரத் தழைக்கும்
எனக்காகாத நானும் என் வேலிக்குள்
எதிரும் புதிருமாய் தின்கோப்பை பகிர்வதுண்டு.

என்றாவது
எரியும் தணலை உள்ளங்கை பொத்தி
எடுத்தலைந்திருந்தால்,
உனக்கும் தெரிந்திருக்கலாம்:
"உள்ளவற்றுட் பொல்லாதது,
உனக்கே நீ பகுங்குவது"

ஆனாலும் சொல்லுவேன்:
"அவ்வப்போது முளைக்கும்
அந்த அரிவாளுக்கப்பாலும்
அகப்படாத்துண்டேனும் உண்டு,
நான்."

21, பெப் '02 வியா 02:18 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home