அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

நார்சீசதேசம்

முக்கலுடன்,
தற்காமச்சந்துகளில் நாமிடுங்கிக்கொண்ட அவலம்.

தன் தேகத்தை, தேசத்தை, நினைவை,
குறியை, குடியை, குலத்தொழிலை மட்டும்
உள்ளபொழுதெல்லாம் ஒருமித் துணத்தி யுலர்த்தி
கசங்கக் கொடி போட்டலைந்து திரியும் விதைகளம்,
மணம் காயா வெயில் மனம்.

பட்டறையில், கைக்கெட்டும் பின்முதுகின் அழுக்குப்படை
செதுக்கக் கிடைத்ததாம்,
சீருறு காக்காப்பொன்;
என் மினுக்கம்! உன் மினுக்கம்! எம் மினுக்கம்!
இறைத்திரைத்து எல்லோர் முற்றத்துக்கும்
இஷ்டப்போக்கில் இடுமெம் கோலங்கள். . .
. . . பொடிகள் மட்டும் அவர்களதாகட்டும்

உள்ளவிரல் தாண்டி
எண்ணப் பெருகும்
தன்னழகில் அழுந்திக்கொண்ட நார்சீசதேசம் எத்தனை?
. . . . . உள் எல்லை குறுகி இறந்த கரப்பான் எத்தனை?

~~~~
*'நார்சீசதேசம்' என்ற பதம் தேவதேவனின் `நார்சீசவனம்' என்பது தந்த எண்ணத்துண்டம்

0பின்னூடுகை:

Post a Comment

<< Home