அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

சிள்வண்டு

எல்லோரிடமும் பறந்த வண்டு என்னிடமும் வந்தது;
"எங்கே என் கேள்வி?" என்றலைந்து,
கம்பிக்கண் காலிரண்டும் தந்தி கொட்டியது.

வாழ்க்கை ஓர் ஆவணக்கேடு;
நேற்றுத்தின்றது இன்றெங்கு கழிந்தது
என்பதைப் புள்ளி பதியாமல்,
அடுத்த தின்னலுக்கு அலையும் தடக்கயிறு.

'எந்தன் அம்மாவுக்கு இன்றென்ன அர்த்தம் நான்?'
-என்றேன்;
"கொன்ற உனக்குக் கூடாது இக்கேள்வி",
சொன்னது,
"கண்டு கன வருடமாச்சு" என்று பறந்தது,
இன்னொரு கேள்வி தின்னப் பிறிதிடம்.

18, பெப்ருவரி 2002 திங் 06:09 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home