அலைஞனின் அலைகள்: கணம்

Monday, December 20, 2004

நடைப்பொழுது

ஆகாப்பொழுதென்பது
நிறபேதமுள்ளது;
ஒன்றில், உயர்ந்தது;
அன்றில், தாழ்ந்தது.

சதுப்பு வெளி
சளசளக்க
உரத்தநடை.

மழைதூறிச் சிணுங்கும்
சதங்கைக்கால்களைக்
கழற்றிப் பொதி வைத்து
மோனம் காவும் முதுகு.
பின்னிருட்டில், பேசாமல்
உதிர்ந்து தொடர்கிறது
எதிர்க்காத பயணிக்கும்
வரப் பொறுக்க முறுவல்.

நிலவொழிய,
காலடியே மெள்ள முளைக்கும்
கள்ளன் கொள்ளிவாய்ப்பிசாசு;
செருமிக் கரகரக்கும்
கண்டற்காற்று மட்டும்.

சதுப்புவெளியிலே
ஒற்றையனின்
உரத்தநடை.

அசந்தர்ப்பங்களில்,
சதங்கையின் சிறப்பே
நெடுநிசப்தம்தான்.

21, feb 2002 thurs 01:28 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home