அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

தலைப்பு

நிச்சயமாக;
யாரில்லையென்றார்?

தலையில்லாமற் திரிவது தர்மசங்கடத்துக்குரியதுதான்.

அதைவிட அசிங்கமாயலைப்பதோ,
முதற் பிறந்த முண்டத்தையே
தலை முகம் திரித்தழிப்பது.

ஆக,
முன் சிரம் வந்து முண்டம் பின்சேராப்போதெல்லாம்
தலையில்லாம லிழிவதே முண்டத் தற்பாதுகாப்பாகிறது.

05, பெப் '02

0பின்னூடுகை:

Post a Comment

<< Home