அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

கனத்த மழைமீது இன்னுமொரு கவனம்

கனத்த மழை பெய்யத் தூங்கப்போகின்றேன்
ஜன்னலைத் தட்டிக் கொண்டிருக்கிறது மழை தள்ளக் காற்று
நடந்து கொண்டிருக்கும் தெரு நானிருக்கும் நாட்டிலில்லை
பெருத்த மழைக்குள்ளும் பிடிபட்டுக்கொண்டு நகரும் பெண்களின் குரல்
தடுப்புக்கு அப்பால்
இயற்கைக்கும் இருப்புக்குமாய் சிந்திக்கொண்டு போகின்ற சொற்களுக்குரி
த்தானோர் அவர்கள்
தெளிந்துகொள்ள முடியா இழப்பை உணர்ந்து கொள்ளமட்டுமென்றே உரத்தடிக்கிறது
ஜன்னலில் மரக்கிளை
"எழும்பு; எழும்பு; இவை இவை உன் பங்கு."
காதை அழுத்திப் பொத்திக்கொண்டு மரவட்டை முடக்கம் சிறுக்கும் உடலெனதாகும்
சொடுக்கின சாட்டை நகநுனியிற் தெறித்தாற்போல் இன்னும் இழுத்து அடிக்கிறது காற்றூதல்


மழை துன்பம்; மழை இன்பம்; மழை அழுகை; ஆனந்தம் மழைநிலமே.
காற்றும் மழையும் கடுங்காதலும் துன்பமும்; காற்றும் மழையும் பேரின்பமும் வன்மமும்.
இடுங்கிச் சரிவன என் உடல் அவயவம்; உலர்ந்து வரள்வது உள்ளே வாழ்சூழல்.
காவிச் செல்வது காற்று; அகல்பாதத்தால் காலத்தை உதைத்தென்னைக் கைதூக்கி
முன்னிலைக்குக் காவிச் செல்வது இராக்காற்று; கூடச் சிலிர்த்தழ கொடுமழை.
நாளை அழிந்த போன பொழுதுகளிலே துள்ளலும் துவளலுமாய்ப் போர்வைக்குள்
காவிச் சென்றதெனைக் காற்று; காதிற் கூவி ஓலமிட்டுப் பாதை அடி பார்த்துப் பதுங்கிப் பி
ன்வந்தது ஓயாமழை.


தேகம் திமிறி அழ அழப் பார்க்கின்றேன் அழிந்த நிலங்களை; குலுங்கி அற அறக் கி
ளைக்கும் அவலத்துரூபங்கள்.
மஞ்சட்களை முளைத்த கறைத்தரையெல்லாம் புதைந்த நாட்கள் வாசம் பொசியும் மெல்ல
மெல்ல நுனிநாசிக்குள்;
நாட்களுட் தூங்கும் நானிழந்த பேர்கள். அறிந்த முகங்கள் அரைகுறையாய் பிளந்து வரும்
தரை; தோல் முடிந்த வடு பிரிந்து வடியும் நிணம்.
வேரும் விழுதும் பின்னி சாரையும் நாகமும் மூசிமூசிப் புணரும் சத்தமோ எச்சமாய்க்
கொக்கியதென் செவிக்குள்?
காற்றின் மழையின் கத்தும் கூத்து; "கவனி கவனி; இது வாழ்ந்துற்ற அவனி"
சோர நனைந்ததில் சேர நடுங்குவேன் தேகம்; காலம் குழப்பி நூற்போர்வையும் அதிரும்;
மெல்லிய ஜன்னலை இன்னும் மின்னல் அதட்டும்; வன்முறை, வன்முறை;
கத்தவுமொண்ணாப் படங்கு மடங்கியடிக்கும் தன் மார்
கண்ணோளி பறிக்கக் கண்ணாடி ஜொலிக்கும். பின்னால், இருள்வான் மயங்க, வேலிப்
பல்லியாய் ஓடும் மின்னல்தன் முதுகெலும்பு.
இன்னும் மூடுவேன் என் மெல்லிய போர்வை; இரு கை சோரவும் இடிகூடி
முழக்கும்; "உன்னுலகிங்கில்லை; அங்கே, அங்கேதான்."


இந்நிலை அந்நிலை எந்நிலை அறியேன்; எல்லாமே கூழாய்க் கொட்டித் தொங்கும் என்
தலை சுற்றச் சுழல சுற்றும்முற்றும்.
கள்ள மழை அள்ளிச் செட்டை தொடர அடிக்கும்; சட்டச்சடசட சட்டச்சடசட; பொன் மி
ன்னி தும்மிச் சிதறி வெடிக்கும் செல்லிடத்தெல்லாம் இடி;
ஜன்னல் மீள நடுக்கும்; கத்தும் இன்னும் கடற்காற்று; "வா, வா; உன்னை அள்ளிப்
போக வந்தேன். உயிரோ உடலோ உனதெல்லாம் எனதாம்."
இன்னும் நான் நினைவின்றி நிலைமாறி நனைய நனைய நடப்பேன்; நாளும் புலமும் நசி
ந்த வசமாய்;
நானறியா வெளியன்றில் மிதந்து தாழ்ந்து; நானறியா வெளி என்றேனா? நானறியேன்.
நனைய நனைய நடந்தேனா? நானறியேன்; அறியேன் நான்.


காற்று வந்தின்னும் "வா, போ" என்றதட்டும் என் காதை; பெரும் வாதை.
போர்வைக்குள் முடக்கவும் மூலையின்றி காலிழுத்துத் துடிக்கும் அட்டை.

6/17/2003

0பின்னூடுகை:

Post a Comment

<< Home