அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

அந்தரங்க விஷயம்

அந்த ரங்கமான விஷயமாக்கும்;
இந்த ராமச்சந்திரனைப் பற்றி அவரும் சொல்லவில்லை
அந்த ராமச்சந்திரனைப் பற்றி இவரும் கேட்கவில்லை.

தந்த ராமச்சந்திரனில்லா நந்தன் அமாவாசை பற்றி
வந்த நாள் தொட்டு எந்த ராமச்சந்திரனாச்சும்
குந்த விருந்து பந்த ராமச்சந்திரருக்குச் சொன்னானா
சந்த மாய்க் கவி என்று சல்லடைத்துப் பார்த்ததினால்,
இந்த நாள் வரைக்கும் எனக்கும் வந்ததில்லை துயர்,
எந்த ராமச்சந்திரன் பற்றி இந்த ராமச்சந்திரன்
அந்த ராமச்சந்திரனுக்கு எடுத்துச் சொன்னானென்று.

சுந்த ரமான ரகுராமச்சந்திரர்பூமியிலே,
எந்த நந்த அமாவாசை என்று இவரும் கேட்கவில்லை
எந்த நந்த அமாவாசை என்று அவரும் சொல்லவில்லை.
மந்தி ரமாய் மனதுள் எண்ணினவன் மட்டும் நான்.

~8, ஜூலை '03 02:30 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter