அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

நாளுள் நான்

நீ வரும் வரைக்கும்
நாள் முழுக்கத் தூங்குகிறேன் - தூங்காநேரத்தில்
தூசு தட்டித் துடைத்துக்கொண்டிருக்கிறேன்
கணியை, பலகணியை, பத்தாண்டுப் பின்நினைவணியை.
அப்போதைப் போலத்தான் அகலாமல்
காலடியிற் கட்டிப்போட்ட குட்டிநாயாய் உறங்குது கொள்காலம்;
விதிரத் தவித்தெழ எப்போதேனும் வீரிடும் தொலைபேசி.
தாயில்லாப் பிள்ளையாய்த் தான் வளரும் வயசையும்
இடை முடிந்துக்கொண்ட இணைப்பையும் தவிர்த்துவிட
சுற்றி எதுவுமே சுற்றா வெம்மதியம், இப்போதும்
உடையும் குமிழாகும் உன்னொரு சாவித்திருப்பலில்.

~10, ஜூலை '03 16:34 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home