அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

வளர்ச்சி

முடிந்த கொண்டைக்குள் ஊரும் ஈராக, கிழமைக்கு
கழியும் அஞ்சலுக்குள் ஒன்றேனும் கண்டன அஞ்சல்.

முறைப்பாட்டுக்கடிதங்கள் மட்டும் முன்பல் முளைத்துத்
தாளிற் தழைக்கின்ற காலமாம் இது.

இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் சிங்கப்பல் உடைந்தார் உடைந்த பல் பேரிலொன்றான
கண்டனம் பேரில் சிங்கப்பல் உடைத்தார் உடைத்துப் புடைத்த கைபேரிலொன்று.

இலக்கியம் பேரில் ஏதோமடத்தாரை எழுத்தடித்ததன் பேரிலொன்று
இலக்கியம் பேரில் எழுந்த மடத்தாரை எடுத்தடித்தவர் பேரிலொன்று
இலக்கியம் பேரில் மடத்தார் எதிர்த்ததை இழுத்துப் பகைத்தார் பேரில்
தடித்தவர் அடித்தவர் அவரைப் படித்தவர் விறைத்தததின் பேரிலொன்று.

எண்ணொணாக் கவலை என்னோடு இருந்தாலும்
இலக்கியக்கவலையன்று இறந்தது காண் இன்று.

வருந்தமிழ் எப்படி வரண்டாலும், பரம்பும் பார், பையப் பைய
கடித இலக்கியச்சுரையேனும் தமிழ்க் காய்ந்து.

~10, ஜூலை '03 02:30 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home