அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

நகர்காட்டிகள்

நகரவாழ்வு பற்றி நாலுபேர் சொன்னார்கள்.
நறுக்கி, "நரகம்" சொன்னார் நகர முன்னால்,
அடுத்தாள் நாவில் "'நடுநிசிநாய்' அலை தெரு."
ஊதி ஒத்தூதி, "கொடுமை" கூறிக் குனிந்தேன்.
என் சின்னமுகம் குறித்தே முழுக்கப் புகைத்தார் ஓராள்;
"ஆலைப்புகை ஊடும் முழத்தீவும் சன்னற்றுளையும்."
சுவருட் சுருங்குலகைச் சுற்றிச் சலித்தார் மற்றாள்.
அவருயிர்க்கக் கண் சுருக்கி நெரிந்ததென் புருவம்.

இருள் பழுக்க, ஆள் போக்கிக் கதவடைத்தேன்.

நினைத்து நானேனும் கேட்டிருக்கலாம்,
முன்னொரு நகரம் வாழ்ந்தோரோ என்று.

~9, ஜூலை '03 02:30 மநிநே.


நன்றி: 'நடுநிசிநாய்' பதத்துக்காக பசுவைய்யா

0பின்னூடுகை:

Post a Comment

<< Home


 
Statcounter