அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும்

எல்லா விழிகளுக்கும் எரிந்துகொண்டிருக்கின்றேன்;
என் விழி மட்டும் இன்னும் தொடர வழிகிறது அடர் இருள்;

காற்றுன் தோணியிலே கடந்துகொண்டிருக்கின்றேன் காலத்தை;
சொரிந்த தினங்கள் புலம்பற்சருகுகளாய்
பொய்த்து அலைகின்றன போம் வழியில்.
தொட்டுக்கொள்ள எகிறும்; மறுகும்
எக்கணத்தும் துவளும்; மெல்லத் தூள்.

எரிந்த குப்பையெல்லாம் எடுத்து அடுக்கிக் கிடுக்கிப்பிடியில்
கிடத்தி வாசித்துக்கொண்டிருக்கின்றது கிழக்காலம் பல்லால்.
என்னையும் இனம் கண்டு
தின்னென்றது, "உன் பங்கு."

ஆங்கே அலைந்த நிழல்கள் கொஞ்சம் அசதிவசமாய்
அகப்பட்டுக்கொண்டதென் கோழிக்கால்களுள்;
வனங்களின் செறிவும் வழிகளின் புல்லும்
வரி கலந்ததாய்க் கசியும் மிதியும் நிழலும்
மருளும் அழியும் மலமாய்க் கழியும்.

அலைய அலைய அமிழும் தோணி.
அலையின் கீழே ஆழமாய் ஆழி.
அகல, களி.

~13 மே 2004, வியாழன் 02:14 மநிநே

0பின்னூடுகை:

Post a Comment

<< Home