அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் III

ஒரு பொசுங்கு தனிப்பூனைமயிருக்குள்
நெடி சிலுப்பி நிலை சுருக்கி நசித்துப்போனவர்களை
நினைத்துப்பார்க்கும் நேரமும் வருமாம் எனக்கு.

தேவாங்குத்தேசத்தின் அலவாங்குப்புதல்வர்களின்
அழுத்தலுள்ளும் வருத்தலுள்ளும் அப்பப்போ
பூனைமயிர் பொசுக்கிப் போனார் புறப்பட்டுப்
புற்றுயிர்த்து வருவார் நான் போம் வழி பார்த்து.

அகப்பட்ட சங்கிலிக்குக் கண்சிமிட்டுவார்
புதைபட்ட கூண்டுக்குப் பூப்பெய்வார்; பொழிலென்பார்
காற்றுக்குழாயுள்ளே கலந்தூற்றுவார் கசப்புத்திராவகம்
பேச்சும் மொழியும் பொசுக்கத் தம் வருத்தம்
பூத்தான் ஒருத்தனைப் பார்த்தாலே பொங்கும்
பூரிப்போடு போய் மறைவார் பூத்த புற்றிலோ
புதிதாயோர் புழு பூரும் பொல்லாச்சந்திலோ

அடுத்த வேளையும் எங்கென்றில்லாது
கூண்டு காண மீண்டு தேர்ந்தெழுவார்
என் தேரோடும் வீதி.

~13 மே 2004, வியாழன் 02:51 மநிநே.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home