அலைஞனின் அலைகள்: கணம்

Thursday, January 20, 2005

தளையுறாததும் தலைப்புறாததும் II

கடற்காற்று கனத்துக் கல்லாய்க் கண் தூங்கும் கழுத்தழுத்த,
சகதிச்சேறாய்ச் சீறி நாறும் சீழ்ச்சாமம் இன்றும் எனது.
சிறுநண்டேறத் தடமாகி சைக்கிளும் நானும்
சாய்ந்தே கிடக்கும் சன்னமண்ணும் தூங்கும்
தனி மின்னல் மட்டும் எண்ணி எண்ணித் துணை
இந்தப்பக்கம் ஒரு முறை அந்தப்பக்கம் மறுமுறை
விரைபாம்பு வீதிக்குள் வேரோடி ஒளியும் வெண்ணிலா.

முடிகின்ற நிலம் எல்லாத்துக்குமாய் முடி நீட்டிக்கிடக்கிறது முழு நிலவு
அப்பப்போ, அறுகின்ற கதிருக்கும் உதிர்கின்ற நெல்லுக்குமாய் ஓங்கி
உப்பி உமிழ்ந்துவிட்டுப்போகிறது ஒளி ஒரு துளி
கறுத்துப்போன வெயிற்காட்டுத்தேகத்துக்கு மழையடித்து
மினுக்கிற நிலவுக்கும் முகமிருட்ட
வடித்து அடி மறைத்து நாசிமூசித் தலையாட்டும்
இரட்டைத்துளிர் மொட்டைக்கிளையின் கீழோர்
தோலுதிர் குட்டிச்சுவரில் தணலள்ளி
நெருப்பைத் திமிரத் தின்ற மரநெஞ்சில் மட்டும்
"இன்னும் ஏன் வரக்காணோம்?!"

வாழ்ந்த சொற்சொட்டும் வழித்தின்று அழிந்தானை வாயகட்டித் தின்றதெது?
கத்துங்கடலோ? கனக்குங் காற்றோ? கால்பாவாக் காரிருளோ?
நாளைப் பத்திரிகையும் நடிக்கும் தெரியாது நடப்பென்று.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home