அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

அடையாளம்

ஆர்டிக் குழாய்களையும்
அத்திலாந்திக்குருவிகளையும்
பிணைத்துப்போட்ட
பேருயிர் வளையம்.

மங்கோலியக்காஷ்மீரையும்
மன்ஹட்டன்முகட்டினையும்
உரசிப்பார்க்கும் உலாவும்மேகம்.

பொதுவாய்,
நீவிட்ட காற்றை நானும்
நான் விட்ட நீரை நீயும்
ஊதியும் உறுஞ்சியும்
ஆகவேண்டியெம்மூழ்.

தனித்துவாழமுடியாமல்
தலையைத் தனக்குட்
பிடித்துத்தள்ளும்
உலகச்சக்கரம்.

இதற்குள்,
நான்போடாக் கையப்பமும்
நீயப்பாப் புவியப்பந்தமும்
நம்வழி-நும்வழி என்று
காலச்சந்தியில் செல்
பந்திபிரியுமென்றால்,
- நண்ப,
அதுவெப்படி?

0பின்னூடுகை:

Post a Comment

<< Home