அலைஞனின் அலைகள்: கணம்

Friday, December 17, 2004

பாம்பு

சட்டையுரித்த சர்ப்பம் சடுதியில் நகர்கிறது.
வலிந்து சுரண்டிக் கழன்ற வலி மறந்துபோனது
பூரிப்பிற் பொத்திச்செல்கிறது பொலியற் புதுமேனியை
நிலைக்கும் பொன்தோலென்று நிகழ்நினைப்பு
உயிர்செத்தசீலைமட்டும் சிதம்பிப் பறக்கிறது
உருவிப்போட்டது ஒட்டிக்கொள்ளுமென்றோ
பரவிப்பரவி விரைகிறது பாம்பு?
சுற்றித்திரும்ப,
உடைந்த தன் சுவரும்
ஒருபோதுக்குணவாகலாம்.
செரிமானம் அடையும் செலுலோசு.

June 11, 2001

0பின்னூடுகை:

Post a Comment

<< Home