அலைஞனின் அலைகள்: கணம்

Saturday, December 25, 2004

ஞாபகம்

இறங்கி நேரே வந்தார்

"இன்னாரோ?" எனத்
தந்தார் கை
"எங்கே மீசை?" என்றார்

இருவாரம் தங்கிப் பின்
இருந்த சுவடும்
இழுத்தழித்துப் போனார்.

வருநாட்போதெல்லாம்,
முகம் வழிக்க, முன் உதித்து,
"ஓசிப் படத்தில் தன்பாட்டில் முளைத்த
ஊசி மயிரெங்கே?"
என மட்டும் கேட்டுச் சென்றார்.

0பின்னூடுகை:

Post a Comment

<< Home